Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒளியால் இருள் அகல்க... மனங்களில் மகிழ்வு பெருகுக: கமல் தீபாவளி வாழ்த்து

ஒளியால் இருள் அகல்க... மனங்களில் மகிழ்வு பெருகுக: கமல் தீபாவளி வாழ்த்து

By: Nagaraj Mon, 24 Oct 2022 6:36:20 PM

ஒளியால் இருள் அகல்க... மனங்களில் மகிழ்வு பெருகுக: கமல் தீபாவளி வாழ்த்து

சென்னை: தமிழகத்தில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். புதிய ஆடைகள் உடுத்தி, பட்டாசுகள் வெடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

actor,celebrate,superstar,twitter ,கமல், நடிகர், ரஜினி, வாழ்த்துகள், டிவிட்டர்

இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘‘எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க்க. எல்லா உணர்வும் ஒன்றால் உணர்க. ஒளியினால் இருள் அகல்க. மனங்களில் மகிழ்வு பெருகுக. என் தீபாவளி வாழ்த்து.’’ என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் இன்று காலை தன் இல்லம் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கையசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|