- வீடு›
- செய்திகள்›
- பிணிநோக்கி நம் உயிர்களை காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்.. மருத்துவர்கள் தினம்..
பிணிநோக்கி நம் உயிர்களை காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்.. மருத்துவர்கள் தினம்..
By: Monisha Fri, 01 July 2022 9:57:46 PM
தமிழ்நாடு: ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
வங்காள முன்னால் முதல் அமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு கூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வரும் அணைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
ஏழை மக்களுக்கு அன்பு உள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்தில் பங்கு எடுத்து பின்னாளில்மேற்கு வங்க முதல் அமைச்சர் ஆன பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளன இன்று தேசிய டாக்டர்ஸ் டே என்று பாரட்ட வேண்டும் என்று குறிபிட்டு உள்ளனர்.
கரோனோ கால கட்டத்திலும் ஒய்வு எடுக்காமல் உழைத்தார்கள் தன் உயிர்களை பற்றி கவலை படாமல் அவர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.