Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாசிக் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்ட கைதியின் வயிற்றுக்குள் கடிதம்

நாசிக் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்ட கைதியின் வயிற்றுக்குள் கடிதம்

By: Karunakaran Fri, 16 Oct 2020 2:58:32 PM

நாசிக் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்ட கைதியின் வயிற்றுக்குள் கடிதம்

நாசிக் மத்திய சிறையில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அஸ்கர் அலி, கடந்த 7-ம் தேதி சிறையில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நாசிக் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரது வயிற்றின் உள்ளே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது தெரியவந்தது.

இதனை கண்ட டாக்டர்கள், கடிதம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர். அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதை பிரித்துப் பார்த்ததில், சிறை காவலர்கள், தன்னை வார்டனாக வேலை செய்யவிடாமல் துன்புறுத்தி வந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை சிறை காவலர்கள் மறுத்துள்ளனர்.

letter,prisoner,suicide,nashik central jail ,கடிதம், கைதி, தற்கொலை, நாசிக் மத்திய சிறை

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட அஸ்கர் அலிக்கு சிறை ஊழியர்களுக்கு உதவும் வார்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அவருக்கு எழுத படிக்க தெரியாது. தற்கொலை கடிதம் எழுத யாராவது அவருக்கு உதவி செய்து இருக்கக்கூடும் என கூறினார். தற்கொலை கடிதம் போலீசார் கையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது சாவுக்கு முன்பு விழுங்கி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், அஸ்கர் அலி சாவிற்கு காரணமாக இருந்த சிறை காவலர்களின் பெயரை தெரிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மற்ற கைதிகள் சிறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags :
|