Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு விலக்கு ... மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கடிதம்

நீட் தேர்வு விலக்கு ... மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கடிதம்

By: vaithegi Thu, 19 Jan 2023 6:23:21 PM

நீட் தேர்வு விலக்கு   ...  மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை மற்றும்  ஆயுஷ் அமைச்சகம் கடிதம்

சென்னை: மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் .... மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்நிலையில் இது தொடர்பாக, நீட் தேர்வில் இருந்து விலக்குக்கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து இம்மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ரவி, நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்து பின்னர் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.இதைத் தொடர்ந்து 2-வது முறையாக தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

neet exam,union home affairs,ayush ministry ,நீட் தேர்வு, மத்திய உள்துறை ,ஆயுஷ் அமைச்சகம்

இம்மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.நீட் தேர்வு விலக்கு பற்றி, ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு அனுப்பிய கடிதத்துக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தந்த நிலையில், மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஓரிரு வாரங்களில் மத்திய அரசுக்கு மீண்டும் பதில் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.

Tags :