முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
By: Nagaraj Sun, 23 Aug 2020 11:17:12 AM
ஆயுள் தண்டனை... அமெரிக்காவில் கோல்டன் ஸ்டேட் கில்லர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு, கொலை, பாலியல் பலாத்கார வழக்குகளில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
1970 மற்றும் 80களில் நடந்த பல்வேறு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வந்த நிலையில், டிஎன்ஏ சோதனை மூலம் 2018 ஆம் ஆண்டு சாக்ரமென்டோ கவுண்டியில் டிஏஞ்சலோவை கைது செய்தனர்.
13 கொலைகள் மற்றும் 13 கற்பழிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை 74 வயதான
டி ஏஞ்சலோ கடந்த ஜூன் மாதம் ஒப்புக்கொண்ட நிலையில், கலிஃபோர்னியாவை பல
ஆண்டுகளாக வேட்டையாடிய ராட்சசன் என்று வழக்கறிஞர்கள் விமர்சித்தனர்.
இதையடுத்து, டி ஏஞ்சலோ கருணைக்கு தகுதியற்றவர் என்று கூறி ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.