- வீடு›
- செய்திகள்›
- அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் ,புதுவையில் அநேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் ,புதுவையில் அநேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
By: vaithegi Thu, 01 Sept 2022 6:50:21 PM
சென்னை சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "தென்மேற்கு பருவமழை தமிழக மற்றும் புதுவையில் தீவிரமாக உள்ளது.
வடதமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களிலும், செப்டம்பர் 2, 3 ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதை அடுத்தது கனமழை பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலையை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மித கனமழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அடுத்த 24 மணி நேரத்தில் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் லேசான மழைதான் பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், கடந்த் ஜூன் 1 ம் முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் ,புதுவையில் பதிவான மழையின் அளவு 40 செ.மீ., இக்காலக்கட்டத்தின் இயல்பளவு 21 செ.மீ., இது இயல்பைவிட 88 சதவீதம் அதிகம்" என தெரிவித்துள்ளார்.