- வீடு›
- செய்திகள்›
- இன்று முதல் நாளை மறுதினம் வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
இன்று முதல் நாளை மறுதினம் வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Mon, 10 Oct 2022 10:09:39 AM
சென்னை: லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ... தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை விலகிவந்தாலும், கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் கனமழையும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்து கொண்டு வருகிறது.
எனவே அதன் தொடர்ச்சியாக வடஇலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய பகுதிகளும்
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.