Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று மற்றும் ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்பு

இன்று மற்றும் ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 01 Aug 2022 5:36:52 PM

இன்று மற்றும் ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 1) மற்றும் ஆகஸ்ட் 2,3,4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 01.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை மற்றும்‌ விருதுநகர்‌, தூத்துக்குடி, சிவகங்கை, திருச்‌சிராப்பள்ளி, கரூர்‌, நாமக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌,

02.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌,திருப்பூர்‌, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, தூத்துக்குடி, மதுரை, திருச்‌சிராப்பள்ளி, கரூர்‌, நாமக்கல்‌, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

tamil nadu,puduvai and karaikal,chance of rain ,தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ ,மழை பெய்ய வாய்ப்பு

03.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிக கன மழையும்‌, ஈரோடு, மதுரை, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்‌சிராப்பள்ளி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ , வேலூர்‌ மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

04.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ , வேலூர்‌, மற்றும்‌ ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 05.08.2022: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது

Tags :