- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
By: vaithegi Thu, 03 Nov 2022 6:27:00 PM
சென்னை: தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காரணமாகவும் இன்று (நவ. 3) முதல் அடுத்த 4 நாட்களுக்கு ( 04.11.2022 முதல் 7.11.2022) மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து இன்று (03.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை, சிவகங்கை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.