இங்கு 3 நாட்களுக்கு மதுக்கடை மூடல்
By: vaithegi Thu, 01 Dec 2022 8:23:07 PM
புதுடெல்லி: இந்தியாவில் தலைநகர் டெல்லியில் 250 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அத்துடன் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி, டிசம்பர் 7ம் தேதி ஆகிய நாட்களை Dry Day என டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது. Dry Day என்பது இந்த நாட்களில் கடைகள், கிளப்புகள், பார்கள் ஆகியவற்றில் மது விற்பனை செய்வதை அரசாங்கம் தடை செய்வதை குறிப்பிடுகிறது.
எனவே அதன்படி தலைநகரில் டிசம்பர் 2 (வெள்ளிக்கிழமை) 17:30 மணி முதல் டிசம்பர் 4ம் தேதி 17:30 மணி வரையும் மற்றும் டிசம்பர் 7 (புதன்கிழமை) அன்று மதுவிற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.