Advertisement

சென்னையில் 2 நாட்கள் மதுக்கடை மூடல்

By: vaithegi Thu, 29 Sept 2022 11:00:31 AM

சென்னையில் 2 நாட்கள் மதுக்கடை மூடல்

சென்னை: இந்தியாவில் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் உலகிற்கு அகிம்சை, உண்மை உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகளையும் கற்று தந்தவர்.

இதையடுத்து நடப்பு ஆண்டு மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இந்த புனித நாளில் காந்தியின் திரு உருவ படத்திற்கு தலைவர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மரியாதையை செய்வர்.

bar,chennai,closed ,மதுக்கடை ,சென்னை,மூடல்

மேலும் அக்டோபர் 2 ம் தேதி அரசு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த விடுமுறை தினத்தில் காந்தியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கூட்டங்கள், சொற்பொழிவுகள் நடத்தப்படும்.

அதை தொடர்த்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன் படி வரும் அக்டோபர் 2ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து இறைத்தூதர் முகமது நபி அவர்களின் பிறந்த தினமான அக்.9 ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.

Tags :
|