Advertisement

தமிழகத்தில் இந்த தேதி மதுபானக்கடைகள் மூடல்

By: vaithegi Tue, 25 Apr 2023 3:17:59 PM

தமிழகத்தில் இந்த தேதி மதுபானக்கடைகள் மூடல்

சேலம் :: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே 1 ஆம் தேதி மதுபானக்கடைகளும் மூடியிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .... நாடு முழுவதும் வரும் மே ஒன்றாம் தேதி திங்கட்கிழமை தொழிலாளர்களை சிறப்பிக்கும் விதமாக உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

liquor stores,salem ,மதுபானக்கடைகள் ,சேலம்

அதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற அனைத்து உயர் ரக ஹோட்டல்கள், பார்கள் மற்றும் மதுபான கடைகள் என அனைத்து மதுபான கடைகளும் மூடியிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிவிப்பையும் மீறி மே 1ஆம் தேதி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியுள்ளார்.

Tags :