Advertisement

நாமக்கலில் 3 நாட்கள் மதுபானக்கடைகள் மூடல்

By: vaithegi Thu, 27 July 2023 1:25:12 PM

நாமக்கலில் 3 நாட்கள் மதுபானக்கடைகள் மூடல்

நாமக்கல் : வருகிற ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் வல்வில் ஓரி திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் மதுபானக்கடைகள் மூடப்படும் ..தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் தமிழக அரசின் சார்பில் மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதாவது, சங்ககாலத்தில் வல்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்து உள்ள கொல்லிமலையை ஆட்சி செய்ததன் காரணத்தினால் ஒவ்வொரு ஆண்டும் கொல்லிமலையில் மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

liquor stores,namakkal ,மதுபானக்கடைகள் ,நாமக்கல்

அந்த வகையில் இந்தாண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வல்வில் ஓரி திருவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதால் திருவிழாவையொட்டி எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற இருக்கும் வல்வில் ஓரி திருவிழாவை ஒட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 1 -ம் தேதி முதல் 3-ம் தேதி வரைக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags :