Advertisement

இங்கு நாளை மதுக்கடைகள் மூடல்

By: vaithegi Wed, 03 May 2023 2:23:58 PM

இங்கு நாளை மதுக்கடைகள் மூடல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா நடைபெற்றது. நேற்றைய தினம் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று சுந்தரேஸ்வரர்- மீனாட்சி அம்மன் திருத்தேரில் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்று கொண்டு வருகிறது.

bars,madurai ,மதுக்கடைகள் ,மதுரை

இதனை அடுத்து இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் மே 5-ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே இந்த விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே – 4ம் தேதி அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவை ஒன்றை பிறப்பித்து உள்ளது.

Tags :
|