Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்

மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்

By: vaithegi Wed, 19 July 2023 12:10:20 PM

மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை: கூடுதல் விலைக்கு மது விற்பனை - சஸ்பெண்ட் நடவடிக்கை .... டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனை அடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதையடுத்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ₹10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுவுள்ளது.

suspend,liquor store ,சஸ்பெண்ட் ,மதுபான கடை

மேலும், கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து , தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



Tags :