சென்னையில் இந்த தேதி மதுபானக்கடை இயங்காது
By: vaithegi Sat, 29 Apr 2023 3:18:00 PM
சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி மற்றும் உழைப்பாளர் தினம் போன்ற தினங்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ம் தேதி சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடை ஊழியர்களுக்கும் ஒரு சிறப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதாவது, சென்னையில் வரும் 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து பார்களும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்
இதனை அடுத்து இந்த அறிவிப்பையும் மீறி மதுபானம் விற்பனை செய்தால் மதுபான விற்பனை விதிகளின்படி ஊழியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.