Advertisement

ராமநாதபுரத்தில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது

By: vaithegi Wed, 25 Oct 2023 5:57:17 PM

ராமநாதபுரத்தில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது

ராமநாதபுரம் : தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா வரும் அக்.27 ஆம் தேதியும், தேவர் ஜெயந்தி அக்.30 ஆம் தேதியும் தொடர்ந்து வரும் நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

liquor stores,ramanathapuram ,மதுபான கடைகள்,ராமநாதபுரம்


மேலும், மாவட்டம் முழுவதும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, முன் அனுமதி இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மாவட்டத்திற்குள் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாது என்பதற்காக வருகிற அக்.28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பினையும் மீறி மதுபான கடைகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :