முத்ரா திட்டத்தில் ரூ.40 கோடி மதிப்பில் கடனுதவி... மத்திய நிதியமைச்சர் தகவல்
By: Nagaraj Mon, 09 Jan 2023 09:15:44 AM
ஜெய்பூர்: மத்திய அமைச்சர் தகவல்... முத்ரா திட்டத்தின்கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் பேசியதாவது:
ராஜஸ்தானில் 2,363 விவசாயிகளுக்கு மத்திய அரசின் திட்டத்தின்கீழ் 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் 9 ஆயிரம் விவசாயிகளுக்கு பணமாகவோ அல்லது டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வாங்குவதற்காகவோ கடன் உதவிகள் வழங்கப்படும்.
அதே போல் முத்ரா திட்டத்தின்கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளும், தொழில் முனைவோர் 20 பேருக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியும் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.