Advertisement

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Tue, 03 Jan 2023 10:26:23 AM

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

குன்னூர் அருகே உள்ள ஜெகதாளவை தலைமை இடமாகக் கொண்டு காரக்கொரை , போதனெட்டி, பேரொட்டி, வள்ளிக்கரை , மஞ்சுதலா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி என 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த திருவிழாவை கொண்டாடி மகிழ்வர்.

அந்த வகையில் படுகர் இன மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஹெத்தையம்மன் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது . இதன் காரணமாக நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரீத் அறிவித்துள்ளார்.

local holiday,festival ,உள்ளூர் விடுமுறை ,திருவிழா

.எனவே,இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து இதற்கு பதிலாக வரும் 21-ம் தேதி சனிக்கிழமை, மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :