Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Thu, 26 Oct 2023 2:05:15 PM

சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சிவகங்கை : தமிழகத்தில் சுதந்திர போரட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம் வருகிற அக்.27 ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது.

அதனால் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகிற அக். 31 ஆம் தேதி முதல் 144 தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் குருபூஜை விழாவை முன்னிட்டு அக். 27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

local holiday,sivagangai , உள்ளூர் விடுமுறை ,சிவகங்கை


சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு

நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அமைந்து உள்ள மருது சகோதரர்களின் சமாதியில் குருபூஜை விழா 3 நாட்களுக்கு நடைபெறஉள்ளது.

Tags :