Advertisement

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Thu, 20 July 2023 2:32:57 PM

இந்த மாவட்டத்திற்கு  நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலில் நாளை திருவிழா நடைபெற இருப்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு .. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்து உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலில் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும், திருவிழாவிற்கு 1 மாதத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மாலை போட்டு பாதயாத்திரை மேற்கொண்டு அம்மனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

local holiday,chengalpattu ,உள்ளூர் விடுமுறை ,செங்கல்பட்டு

அந்த வகையில் இந்தாண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆதிபராசக்தி சித்தர்பீடத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே இந்த திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் விதமாக அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :