Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 05 July 2022 11:13:18 AM

கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் மகா கும்பாபிஷேக திருவிழா மிகவும் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கும்பாபிஷேக திருவிழாவின் நிகழ்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன் பூஜைகளுடன் துவங்கியது. இந்த பூஜைக்காக கேரளா, தமிழகம் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

local holiday,school,college ,உள்ளூர் விடுமுறை,பள்ளி, கல்லூரி

இதனை தொடர்ந்து வரும் ஜூலை 6ம் தேதி அதிகாலை 5.15 மணி முதல் 6.50 மணிக்குள் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், அவசர கால பணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலகம் மற்றும் கிளை கருவூலகம் ஆகியவை வழக்கம் போல இயங்கலாம். மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் ஜூலை 23ம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Tags :
|