Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு

நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு

By: Karunakaran Fri, 07 Aug 2020 08:08:18 AM

நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு

மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ்மோடி, தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்றார். ஆனால், கடனை திரும்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில், லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கேட்டு தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டு வருகிறது. அதன்பின், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

london court,nirav modi,custody,august 27 ,லண்டன் நீதிமன்றம், நீரவ் மோடி, காவல், ஆகஸ்ட் 27

இந்நிலையில் நிரவ் மோடி மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நடைபெற்றபோது, நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நிரவ் மோடியின் சிறை காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

28 நாள்களுக்கு ஒரு முறை நிரவ் மோடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வருகிறார். தற்போது அவரது காவல் நேற்று முடிவடைய இருந்தது. இந்நிலையில் சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு நீதிபதி வனேசா பரைட்சர் முன்பு நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 27-ந் தேதிவரை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

Tags :