- வீடு›
- செய்திகள்›
- நான் படித்த கல்லூரிக்குச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்... ராகுலின் நெகிழ்ச்சி பதிவு
நான் படித்த கல்லூரிக்குச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்... ராகுலின் நெகிழ்ச்சி பதிவு
By: Nagaraj Fri, 17 Feb 2023 10:46:39 AM
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீரில் நடைபயணம் மேற்கொண்டார். அவர் தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், பிப்ரவரி 24 முதல் 26 வரை சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் காங்கிரஸ் கட்சி மாநாடு நடக்கிறது. இதில், வரும் 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இதில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று கூறப்பட்டாலும், இங்கிலாந்து சென்று லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும், புவிசார் அரசியல், ஜனநாயகம், சர்வதேச உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, “புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் ஜனநாயகத்தில் சிறந்து விளங்கும் நபர்களுடன் நான் தொடர்பு கொள்ளப் போகிறேன்.
நான் படித்த கல்லூரிக்குச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை பார்வையிட ஆவலுடன் காத்திருக்கிறேன் .