LPG சிலிண்டர் விலை கடும் உயர்வு! குடும்பத்தலைவிகளுக்கு அடுத்த ஷாக்
By: Monisha Wed, 06 July 2022 8:47:48 PM
டெல்லி: சமையல் சிலிண்டர் விலை இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இப்போது அனைவரது வீட்டிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் வாயிலாக அரசு தரப்பிலிருந்து இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருவதால் சிலிண்டர் பயன்பாடு இந்தியாவில் அதிகமாக உள்ளது.
ஏனெனில் சிலிண்டர் விலை இப்போது 1000 ரூபாயைத் தாண்டிவிட்டது. போதாத குறைக்கு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பெட்ரோல் விலை, காய்கறி விலை போன்ற விலையேற்றங்களுக்கு மத்தியில் சிலிண்டர் விலையும் புண்படுத்துகிறது.
பொதுத் துறை நிறுவனங்கள் இன்று (ஜூலை 6) வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக அதிகரித்துள்ளது.கடந்த மே மாதம்தான் சமையல் சிலிண்டரின் விலை 1000 ரூபாயைக் கடந்தது.
மே 7ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டதால் ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக அதிகரித்ததது. பின்னர் மே 19ஆம் தேதி ரூ.1018.50 ஆக கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. மக்கள் அவதி படுகிறார்கள்.