Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களில் 100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களில் 100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம்

By: Karunakaran Thu, 06 Aug 2020 11:55:41 AM

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களில் 100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம்

சீனாவில் உள்ள உகானில் நகரில் தான் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது. இந்நிலையில் அங்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 பேரை உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் ஆஸ்பத்திரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. இவர்களின் சராசரி வயது 59 ஆகும்.

இவர்களிடம் நடத்திய ஆய்வில், ஜூலையுடன் முடிந்த முதல் கட்ட முடிவில் இந்த 100 பேரில் 90 பேர் நுரையீரல் சேதம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களின் நுரையீரல் காற்றோட்டம், வாயு பரிமாற்ற செயல்பாடுகள், ஆரோக்கியமான மற்றவர்களின் நிலைக்கு மீள வில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை டாக்டர் பெங் ஜியோங் தலைமையிலான குழு நடத்தியது.

lung damage,corona survivors,corona infection,wuhan ,நுரையீரல் பாதிப்பு,மீண்டவர்கள், கொரோனா தொற்று, வுஹான்

இதுகுறித்து பீஜிங் பல்கலைக்கழகத்தின் டோங்ஸிமென் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் லியாங் டெங்ஸியாவ் கூறுகையில், கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகும் ஆக்சிஜன் எந்திரங்களை நம்ப வேண்டியதிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆய்வில், கொரோனா பாதித்து மீண்ட 65 வயதுக்குட்பட்டோரில் 10 சதவீதம்பேரின் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் மறைந்து விடுவதும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றி 8 மாதங்கள் ஆகியும் அதன் தாக்கம் குறைந்த பாடில்லை, கொரோனா தோன்றியதிலிருந்து இதுகுறித்து பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :