Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோதனை, துரோகங்களை 29 ஆண்டுகளாக கடந்து வந்துள்ளது மதிமுக

சோதனை, துரோகங்களை 29 ஆண்டுகளாக கடந்து வந்துள்ளது மதிமுக

By: Nagaraj Sat, 06 May 2023 8:41:39 PM

சோதனை, துரோகங்களை 29 ஆண்டுகளாக கடந்து வந்துள்ளது மதிமுக

சென்னை: மதிமுக சோதனைகளையும், பல துரோகங்களையும் கடந்த 29 ஆண்டுகள் கடந்து வந்துள்ளது என்று வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.க. கட்சியின் 30வது ஆண்டு தொடக்க விழா சென்னை எழும்பூரில் நடந்தது. பொதுச்செயலாளர் வைகோ கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.


பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ ஏமாற்றங்களையும், சோதனைகளையும், பல துரோகங்களையும் கடந்து 29 ஆண்டுகள் கடந்து இன்று 30வது ஆண்டில் நிற்கிறது.

confusion,governor,vaiko, ,கவர்னர், குழப்பம், வைகோ

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு காலாவதியான மனிதர். தமிழகத்திற்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. மாபெரும் தலைவர்கள், பல சோதனைகள் மூலம் தமிழகம் வளர்ந்த வரலாற்றை ஆளுநர் ரவி அறியாமல் இருக்கிறார்.

இதுவரை இருந்த ஆட்சிகளில் தி.மு.க., அரசின் இரண்டாண்டு ஆட்சி சிறப்பான ஆட்சி. ஸ்டாலின் தலைமையில் அனைத்து மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்றும் அரசாக திராவிட மாதிரி அரசு வெற்றி பெற்ற அரசாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|