Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிருஷ்ணகிரி டாக்டர் கண்டுபிடித்த கொரோனா வைரஸ் மருந்தை பரிசீலிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

கிருஷ்ணகிரி டாக்டர் கண்டுபிடித்த கொரோனா வைரஸ் மருந்தை பரிசீலிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

By: Monisha Fri, 12 June 2020 10:28:07 AM

கிருஷ்ணகிரி டாக்டர் கண்டுபிடித்த கொரோனா வைரஸ் மருந்தை பரிசீலிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

krishnagiri,doctor,coronavirus,madras high court,indian medical research council ,கிருஷ்ணகிரி,டாக்டர்,கொரோனா வைரஸ்,சென்னை ஐகோர்ட்,இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்த மனுவை நேற்று காணொலிக்காட்சி மூலம் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் கண்டுபிடித்துள்ள ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை ரூ.2-க்கு குறைவானது தான். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Tags :
|