ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு நாளை விசாரணை .. சென்னை உயர்நீதிமன்றம்
By: vaithegi Wed, 29 Mar 2023 12:34:40 PM
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ரத்து செய்வது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒற்றை நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன் நடைபெற்று, ஓ.பன்னீர்செல்வம்தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதியாமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் இந்த ஒற்றை நிதிமன்ற தீர்ப்பை எதிர்த்து , அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட கூடாது என கூறியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு இன்று விசாரிக்கப்படும் என பட்டியலிடப்பட்டுயிருந்தது.
இந்த நிலையில், நேற்று தான்தீர்ப்பு வெளியாகியள்ளது என்ற காரணத்தால் , உடனடியாக அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாதா காரணத்தால், மின்னணு ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டுயிருந்தது.
எனவே இதை ஏற்று, சென்னை உயர்நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு நாளை ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என கூறியுள்ளது. இதற்கிடையில் இந்த மேல்முறையீடு வழக்கு தொடர்பாக கேவியேட் மனுவை இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.