Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது; மு.க.ஸ்டாலின்

மதுரை மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது; மு.க.ஸ்டாலின்

By: Monisha Sat, 12 Sept 2020 3:17:19 PM

மதுரை மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது; மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா. இவர் நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

madurai student,suicide,neet exam,trauma,mk stalin ,மதுரை மாணவி,தற்கொலை,நீட் தேர்வு,அதிர்ச்சி,மு.க.ஸ்டாலின்

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலைக்கு முன் மாணவி பேசிய ஆடியோ நீட் தேர்வின் கோரமுகத்தைக் காட்டுகிறது.

ஒரு தேர்வு, மாணவர் மனங்களை நிலைகுலைய வைப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீதுர்கா மரணம் வரை உணர முடிகிறது. தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் என்பது ஒரு தேர்வே அல்ல. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :
|