Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிரா அரசு தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு சிறப்பு திட்டம் வகுத்துள்ளது

மகாராஷ்டிரா அரசு தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு சிறப்பு திட்டம் வகுத்துள்ளது

By: vaithegi Wed, 12 Oct 2022 2:47:18 PM

மகாராஷ்டிரா அரசு  தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு சிறப்பு திட்டம் வகுத்துள்ளது

மகாராஷ்டிரா : தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு சிறப்பு திட்டம் ..... ஏழைகள் மற்றும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. மேலும், இந்த தீபாவளிக்கு 513 கோடி ரூபாய்க்கான சிறப்புத் தொகுப்பை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அரசு தீபாவளி பரிசு வழங்க உள்ளது. வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு மாநிலத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு 100 ரூபாய்க்கு மளிகைப் பொருட்களை வழங்க மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ration card holder,diwali ,ரேஷன் கார்டுதாரர்,  தீபாவளி

இந்த 100 ரூபாய் கொண்ட இந்த பாக்கெட்டில் ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், பருப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை இருக்கும்.இந்த சலுகையில் 30 நாட்களுக்கு பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும், சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய், ரவை போன்றவற்றை ரூ.478 கோடிக்கு அரசு கொள்முதல் செய்துள்ளதாகவும்,

மேலும் இது தவிர ரேஷன் கார்டுதாரர்களுக்கான இதர உணவுப் பொருட்கள் 35 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

Tags :