- வீடு›
- செய்திகள்›
- 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மகேந்திர சிங் டோனி போட்டியிடவேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மகேந்திர சிங் டோனி போட்டியிடவேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி
By: Karunakaran Sun, 16 Aug 2020 2:04:49 PM
இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் டோனி ஓய்வு குறித்து பலரும் கருத்து தெரிவித்த வந்த நிலையில், நேற்று மாலை அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அதேபோல் சகவீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக பதிவிட்டார்.
இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. டோனியின் ஓய்வு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி, டோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், எம்.எஸ். டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், ஆனால் வேறு எதில் இருந்தும் அல்ல. அவரது திறமையால் முரண்பாடுகளுக்கு எதிராக போராட முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், கிரிக்கெட்டில் அவர் நிரூபித்த ஒரு அணியின் எழுச்சியூட்டும் தலைமை பொது வாழ்க்கையிலும் தேவை. அவர் 2024ம் நடைபெறவுள்ள மக்களவைத் பொதுத் தேர்தலில் போராட வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.