சீன முன்னாள் அதிபர் மறைவுக்கு இரங்கல் செலுத்த சென்ற மஹிந்த ராஜபக்ச
By: Nagaraj Sat, 03 Dec 2022 10:18:30 AM
கொழும்பு: சீன முன்னாள் அதிபருக்கு இரங்கல்... இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு விஜயம் செய்தார். அவரது திடீர் விஜயத்திற்கு காரணம் தெரிய வந்துள்ளது.
சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் தனது 96வது வயதில் கடந்த கடந்த 30ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில் உயிரிழந்த சீனாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீன தூதரகத்திற்கு சென்றிருந்தார். அனுதாப குறிப்பிலும் கையொப்பமிட்டார்.
பொருளாதார நெருக்கடி பிரச்னைகளால் மக்கள் வெகுண்டெழுந்து பல போராட்டங்கள் நடத்திய நிலையில் பதவியை ராஜினாமா செய்தவர் தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இருப்பினும் மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.