Advertisement

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு

By: vaithegi Sat, 22 Apr 2023 1:52:50 PM

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பாக மாதந்தோறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அது போக உப்பு, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து இந்த பொருட்களை வாங்க சொல்லி கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக அட்டைதாரர்கள் புகார் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

ration shop,groceries ,ரேஷன் கடை,மளிகை பொருட்கள்

இதனால் திட்டமிட்டதைவிட அதிக தொகையை செலவிட நேர்வதாகவும் கூறுகின்றனர். இதனை அடுத்து இது பற்றி பேசிய உணவு மற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது, ரேஷன் கடைகளில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி ஊழியர்கள் எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :