Advertisement

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு

By: vaithegi Thu, 02 Nov 2023 2:15:15 PM

ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு

சென்னை: தீபாவளி பண்டிகைக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் வழங்கக்கூடிய அரிசி உள்ளிட்ட இதர பொருட்களை விரைந்து வழங்க அலுவலர்களுக்கு உத்தரவு ... தமிழக முதல்வர் தலைமையில் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து இக்கூட்டத்தில் ரேஷன் பொருட்களை பயனர்களுக்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடப்பு மாதம் அரிசி உள்ளிட்ட இதர ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ration shops,family cardholder ,ரேஷன் கடைகள்,குடும்ப அட்டைதாரர்

மேலும் தீபாவளி பண்டிகை வரை நியாய விலை கடைகள் உரிய முறையில் திறக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த பணிகளை வருகிற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளில் ஒப்பந்த புள்ளி முடிவு செய்யப்பட்ட இடங்களில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மலைப்பிரதேசங்களில் பயன்பாட்டில் உள்ள நியாய விலை கடைகள் வனவிலங்கு மூலம் தாக்கப்படுவதை தடுக்க முன் கதவுகள் அமைக்கப்பட்டு இரட்டை அடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டார்.

Tags :