Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணி .... விரைவு ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்பு பணி .... விரைவு ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

By: vaithegi Fri, 04 Nov 2022 2:20:52 PM

பராமரிப்பு பணி    .... விரைவு ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: ரெயில் போக்குவரத்தில் மாற்றம் .... தென்னக ரெயில்வே வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுருப்பதாவது:- ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 7 முதல் 12 ஆம் தேதி வரை மதுரை - செங்கோட்டை இடையிலான ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதனை அடுத்து மதுரை - விழுப்புரம் விரைவு ரெயில், நவம்பர் 8, நவம்பர் 10-12, நவம்பர் 28-30 வரை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரெயில், நவம்பர் 18, 19, 21, 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

railway,maintenance work ,ரெயில் ,பராமரிப்பு பணி

அதைத்தொடர்ந்து கோவை - நாகர்கோவில் விரைவு ரயில், சென்னை - குருவாயூர் விரைவு ரெயில் நவ.22, 25, 26ல் தாமதமாக நெல்லை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 6.15 மணிக்கு புறப்படும்.

மேலும் நவம்பர் 22, 25, 26ல் வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் சேவை கிடையாது என தென்னக ரெயில்வே தரப்பில் தெரிவித்துள்ளது.

Tags :