Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்தடை

நாளை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்தடை

By: vaithegi Fri, 14 Oct 2022 7:09:26 PM

நாளை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மண்மங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி  ..   மின்தடை

கரூர் : பராமரிப்பு பணி .. நாளை கரூர் கோட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம் துணை மின்நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியியலாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதனால் இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பராமரிப்பு முடிவடையும் வரை தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இதனை தொடர்ந்து மண்மங்கலம் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, வெங்கமேடு, மண்மங்கலம், ஏவிபி நகர், சின்னவடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

power outage,karur ,மின்தடை ,கரூர்

இதனை அடுத்து துளிப்பட்டி, காமராஜ் நகர், காளிபாளையம், திட்டச்சாலை மெயின்ரோடு, நேரு நகர், வெங்கமேடு சேலம் மெயின்ரோடு, சிவியம்பாளையம், காதப்பாறை, சின்னவ ரப்பாளையம், பேங்க் காலணி, பெரியவரப்பாளையம், வெண்ணைய்மலை பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளும்

மேலும் வெண்ணைய்மலை, கோதூர், பெரியவடுகப்பட்டி, வள்ளிப்பாளையம், பண்டுதகாரன்புதுர், நாவல் நகர், செம்மடை, மண் ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :