Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை விஜயாபதி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி ... ஆகஸ்ட் 23 மின் விநியோகம் தடை

நெல்லை விஜயாபதி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி ... ஆகஸ்ட் 23 மின் விநியோகம் தடை

By: vaithegi Sun, 21 Aug 2022 1:21:13 PM

நெல்லை விஜயாபதி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி  ...  ஆகஸ்ட் 23 மின் விநியோகம் தடை

நெல்லை : நாளை திருநெல்வேலியில் விஜயாபதி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதையடுத்து இது தொடர்பாக வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளதாவது, நாளை மறுநாள் (ஆக.23) வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட விஜயாபதி துணை மின் நிலையத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அதனால் இந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

power supply interruption,nellie ,மின் விநியோகம் தடை ,நெல்லை

அதன் படி விஜயாபதி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான முருகானந்தபுரம், கூத்தன்குழி, உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளார்.

அதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மின்வினியோக செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

Tags :