Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பழனி, தேனியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி ... நாளை மின்தடை

பழனி, தேனியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி ... நாளை மின்தடை

By: vaithegi Sun, 21 Aug 2022 6:58:27 PM

பழனி, தேனியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி ...   நாளை மின்தடை

பழனி: தமிழகத்தில் நாளை பழனி, தேனியில் உள்ள மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே இதனால் பழனியில் பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி ஆகிய பகுதிகளிலும்

இதை தொடர்ந்து வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி, தாழையூத்து, நாகூா்பிரிவு, மற்றும் சுக்கமநாயக்கன்பட்டி, கரடிகூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆக.22) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

electricity,banana,honey ,மின்தடை,பழனி, தேனி

இதே போன்று தேனி மாவட்டத்திற்குட்பட்ட ராசிங்காபுரம் துணை மின் நிலையத்திலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம்,

மேலும் சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆக.22) காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|