Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் உள்ள ரயில்வே யார்டில் இன்று பராமரிப்பு பணி..குறிப்பிட்ட ரயில்களின் சேவைகள் மட்டும் மாற்றம்

சென்னையில் உள்ள ரயில்வே யார்டில் இன்று பராமரிப்பு பணி..குறிப்பிட்ட ரயில்களின் சேவைகள் மட்டும் மாற்றம்

By: vaithegi Wed, 29 June 2022 3:46:01 PM

சென்னையில் உள்ள ரயில்வே யார்டில் இன்று பராமரிப்பு பணி..குறிப்பிட்ட ரயில்களின் சேவைகள் மட்டும் மாற்றம்

சென்னை : தெற்கு ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது ரயில் சேவைகளில் சில மாற்றங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தாம்பரம் ரயில்வே யார்டில் இன்று காலை 9:55 மணி முதல் மதியம் 1:55 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

இதனால், சில குறிப்பிட்ட ரயில் சேவைகளுக்கான நேரம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை கிளம்ப வேண்டிய சென்னை எழும்பூர் வழியே மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று செங்கல்பட்டில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, புதுச்சேரி வழியாக புதுடெல்லிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் மாற்றுப்பாதை வழியாக செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

rail,maintenance work ,ரயில் ,பராமரிப்பு பணி

மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்த பிறகு வழக்கம் போல எழும்பூர் – மதுரை வைகை விரைவு ரயில் மற்றும் புதுச்சேரி – புதுடில்லி விரைவு ரயில் ஆகிய இரு ரயில்களும் வழக்கம் போல இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இத்துடன், இந்த இரண்டு ரயில் சேவைகளுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் பயணிகள் கவனமாக எந்தெந்த மாற்றுப்பாதை வழியாக ரயில் செல்ல இருக்கிறது என்பதை தெரிந்து பயணிக்கும்படி தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.

Tags :
|