Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விஜயாபுரி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி .. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை

விஜயாபுரி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி .. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை

By: vaithegi Sun, 28 Aug 2022 10:57:34 AM

விஜயாபுரி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி  ..  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை

விஜயாபுரி : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்களுக்கு விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே இதனால் மின் விபத்துகளை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நாளில் பராமரிப்பு செய்யும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மக்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டு விடும்.

maintenance work,substation ,பராமரிப்பு பணி, துணை மின்நிலையம்

அதன்படி விஜயாபுரி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மற்றும் மந்தித்தோப்பு உபமின் நிலையங்களாக பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான மீதமுள்ள பணிகளை திங்கட்கிழமை அதாவது ஆகஸ்ட் 29ம் தேதி மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இதனால், ஆகஸ்ட் 29ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கெச்சிலாபுரம், கிழவிபட்டி பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :