பராமரிப்பு பணி ..நாளை முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் ரத்து
By: vaithegi Tue, 28 Nov 2023 10:19:03 AM
சென்னை: சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்பவர்கள் அதிக அளவில் பயணித்து கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயில் பயன்படுத்தி பயனடைந்து கொண்டு வருகின்றனர். அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்காக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் தெற்கு ரயில்வே சென்னை கூட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது ”பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவ.29 முதல் வருகிற டிச.14-ம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், அந்நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்” என்று அதில் தெரிவிப்பட்டு உள்ளது.