Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணி .. நெல்லை பகுதியில் ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி .. நெல்லை பகுதியில் ரயில் சேவையில் மாற்றம்

By: vaithegi Wed, 09 Aug 2023 09:59:03 AM

பராமரிப்பு பணி ..  நெல்லை பகுதியில் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: பாலம் பராமரிப்பு பணி காரணமாக நெல்லை பகுதியில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிப்பு ... ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

“நெல்லை ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

* நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06675), திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06680) இன்று ( ஆகஸ்ட் 09) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

train service,maintenance work,special train , ரயில் சேவை,பராமரிப்பு பணி , சிறப்பு ரயில்

இதனை அடுத்து * நாகர்கோவில் - தாம்பரம் அந்யோதயா விரைவு ரயில் (20692) இன்று விருதுநகரிலிருந்து புறப்படும். *பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) இன்று பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

* திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732) இன்று திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும்.” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :