Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி மாவட்டத்தில் பராமரிப்பு பணி .. நாளை மின் விநியோகம் தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் பராமரிப்பு பணி .. நாளை மின் விநியோகம் தடை

By: vaithegi Wed, 24 Aug 2022 1:19:45 PM

திருநெல்வேலி மாவட்டத்தில்  பராமரிப்பு பணி  ..   நாளை மின் விநியோகம் தடை

சென்னை: தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட பகுதிகளில் மின்வாரியம் சார்பாக மின்தடை அறிவிக்கப்படும். அதன்படி நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கரிசல்பட்டி, பிள்ளைக்குளம், காணியாளர் குடியிருப்பு, புத்தமடை, பட்டன்காடு, இடையன்குளம், கங்கனாங்குளம் ஆகிய பகுதிகளிலும்

இதை அடுத்து கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்ரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, ஆகிய பகுதிகளில் நாளை(ஆகஸ்ட் 25) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

power supply interruption tirunelveli,maintenance work , மின் விநியோகம் தடை திருநெல்வேலி, பராமரிப்பு பணி

இதே போன்று சேரன்மாதேவி துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேரன்மாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்ரமணியபுரம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் கரிசூழ்ந்த மங்கலம், கேசவ சமுத்திரம் ஆகிய பகுதிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags :