மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் குளறுபடி: நோயாளிகள் பெரும் அவதி
By: Nagaraj Thu, 31 Aug 2023 8:05:15 PM
சென்னை: சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டு வருவதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 2ஆவது நாளாக மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டினர்.
தனியார் செவிலியர் கல்லூரி பயிற்சி மாணவர்களை வைத்து வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் மாற்றி வழங்கப்பட்டுவதாக கூறி, நோயாளிகள் வாக்குவாதம் செய்தனர்.
மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் நிலவும் குளறுபடியை ஒப்புக்கொள்வதாக தெரிவித்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், அதற்காக வருத்தம் தெரிவித்து, இனி அவ்வாறு நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.