Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

By: Nagaraj Sun, 02 Apr 2023 2:52:06 PM

எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை: குடிபோதையில் கொலை மிரட்டல்... மராட்டியத்தில், சிவசேனாவின் (உத்தவ் அணி) எம்.பி., சஞ்சய் ராவத்துக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்தது, குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்ததாக, ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. சஞ்சய் ராவத், இம்மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனாவின் (உத்தவ் தாக்கரே அணி) மேல்சபை எம்.பி.

பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.

drunk,open,statement , குடிபோதை, நபர், வாக்குமூலம், நடவடிக்கை, விசாரணை

அதில், டெல்லிக்கு வந்து என்னைச் சந்திக்கவும்..ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம். “பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது போல் நீங்களும் கொல்லப்படுவீர்கள். நடிகர் சல்மான் கானும் கொல்லப்படுவார்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதன்படி புனே பொலிசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் பெயர் ராகுல் தலேகர் (23). குடிபோதையில் அவர் மிரட்டல் விடுத்ததாகவும், அவருக்கும் பிஷ்னோய் கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

எனவே, ‘முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மகாராஷ்டிர மாநில துணை முதல்வர், பட்னாவிஸ் கூறினார்.

Tags :
|
|