Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு தாக்கல்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு தாக்கல்

By: Nagaraj Wed, 03 May 2023 11:55:23 PM

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனு தாக்கல்

டெல்லி: ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்தார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு துணை முதல்வராக மணிஷ் சிசோடியா இருந்தார். மாநில அரசு கொண்டு வந்த மதுக் கொள்கையில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ-யால் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

bail,court,delhi,manish-sisodia , ஜாமீன், டெல்லி, நீதிமன்றம், மணீஷ் சிசோடியா

இதையடுத்து, இந்த வழக்கில் திகார் சிறையில் இருந்த மணீஷ் சிசோடியாவும் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் சிசோடியா 2 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தொடர்ந்த வழக்குகளில் சிசோடியாவை மே 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்தார்.

மணீஷ் சிசோடியா தனது மனுவில், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி இடைக்கால ஜாமீன் கோரியுள்ளார். இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மனு மீதான வாதங்களை பதிவு செய்யுமாறு சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே மனிஷ் சிசோடியா டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

Tags :
|
|
|