Advertisement

மாண்டஸ் கடந்து போயிடுச்சு... அடுத்தது உருவாக இருக்காம்

By: Nagaraj Sun, 11 Dec 2022 11:55:50 AM

மாண்டஸ் கடந்து போயிடுச்சு... அடுத்தது உருவாக இருக்காம்

சென்னை: மாண்டஸ் புயல் நேற்று சூறாவளி காற்றுடன் கரையை கடந்து சென்ற நிலையில் மீண்டும் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் மீண்டும் வரும் 13-ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மேலடுக்கு சுழற்சி டிசம்பர், 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

meteorology,center,pressure,depression,information ,வானிலை ஆய்வு, மையம், காற்றழுத்தம், தாழ்வு மண்டலம், தகவல்

மேலும் மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் 9 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. இது கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags :
|