- வீடு›
- செய்திகள்›
- மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் வாக் நஹ் ஆயுதம் பிரிட்டனிலிருந்து இந்தியா வரப்போகிறது
மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் வாக் நஹ் ஆயுதம் பிரிட்டனிலிருந்து இந்தியா வரப்போகிறது
By: Nagaraj Mon, 11 Sept 2023 06:45:38 AM
புதுடில்லி: அரிய கலைப்பொருள் வருகிறது... பிரிட்டனில் இருக்கும் மராத்திய பேரரசா் சத்ரபதி சிவாஜியின் அரிய கலைப் பொருள் இந்தியா கொண்டு வரப்பட இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்ற நிலையில், இத்தகவலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சத்ரபதி சிவாஜியின் புகழ்பெற்ற இரும்பு ஆயுதம் (வாக் நஹ்) இந்தியாவுக்கு கொண்டு வரப்பட இருப்பதால், நாம் அனைவரும் நமது வரலாற்றைக் காணத் தயாராவோம். நமது பொக்கிஷ கலைப் பொருள் நாட்டுக்குத் திரும்பி வருவது, இந்தியாவின் தூதரக ரீதியிலான முயற்சிகளுக்கு கிடைத்த பெரிய வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியா தனது வரலாற்றை மீட்டெடுக்கிறது’ என்ற தலைப்பிலான விளம்பரப் பதாகையுடன் இந்தப் பதிவை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பதாகையில், ‘தனது எதிரியான அஃப்சல் கானை முறியடிக்கை இந்த ‘வாக் நஹ்’ ஆயுதத்தை சிவாஜி பயன்படுத்தினாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.