மார்க் ஜுக்கர்பெர்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு செலவுகளுக்கான தொகை உயர்வு
By: Nagaraj Fri, 17 Feb 2023 10:46:24 AM
லண்டன்: பாதுகாப்பு செலவுகளுக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு தெரியுங்களா?
தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு செலவு ரூ.33.08 கோடியில் இருந்து சுமார் ரூ.116 கோடியாக உயர்ந்துள்ளதாக மெட்டா கார்ப்பரேஷன் தலைவர் தெரிவித்தார்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான மார்க் ஜுக்கர்பெர்க், செலவுக் குறைப்புத் திட்டங்களில் சுமார் 11,000 பேரை பணிநீக்கம் செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் திட்டத்தின் செலவு சூழ்நிலை காரணமாக எடுக்கப்பட்டதாகவும், சூழ்நிலைகளுக்கு அவசியமானதாகவும் என்று மெட்டா தெரிவித்துள்ளது .
Tags :